இராமேசுவர,நாகப்பட்டின
மீனவனுக்கு மட்டும்
மயானக்கரை
கடற்கரைதான்...
சுட்டுக் கொள்வது
சிங்களவனின் வேலை
அடக்கம் செய்வது
இந்தியனின் வேலை
அழுது புலம்புவதே!
தமிழர் கடமை..
கடல் அலையில்
மிதப்பது படகு அல்ல!
பாடை..
மீனவன் பிடித்த
மீன்களுக்காவது
உயிர் இருக்கிறது
மீன் பிடித்தவன் மட்டும் தான்
பிணமாய்
கடல் மீன்கள்
வயிற்றில்
குடல்கள் குறைவு..
குண்டுகளே அதிகம்!
இந்தியக் கடற்படை
காப்பாற்றியதில்லை...
மீன்களே காப்பற்றியது
மீனவர்களை..
இக்கரையில்
இந்தியன்..
அக்கரையில்
சிங்களன்..
காயம் பட்டு
சாயம் போகிறது
கடல்....
கரையில் மீன்கள்
கருவாடு..
கடலே..மீனவனின்
சுடுகாடு!
--