Wednesday, July 28, 2010

மீனவ்ன் சுடுகாடு


 

 

 

 

 

இராமேசுவர,நாகப்பட்டின

மீனவனுக்கு மட்டும்

மயானக்கரை

கடற்கரைதான்...

 

சுட்டுக் கொள்வது

சிங்களவனின் வேலை

அடக்கம் செய்வது

இந்தியனின் வேலை

அழுது புலம்புவதே!

தமிழர் கடமை..

 

 

 

கடல் அலையில்

மிதப்பது படகு அல்ல!

பாடை..

 

 

மீனவன் பிடித்த

மீன்களுக்காவது

உயிர் இருக்கிறது

மீன் பிடித்தவன் மட்டும் தான்

பிணமாய்

 

கடல் மீன்கள்

வயிற்றில்

குடல்கள் குறைவு..

குண்டுகளே அதிகம்!

 

இந்தியக் கடற்படை

காப்பாற்றியதில்லை...

மீன்களே காப்பற்றியது

மீனவர்களை..

 

 

இக்கரையில்

இந்தியன்..

அக்கரையில்

சிங்களன்..

காயம் பட்டு

சாயம் போகிறது

கடல்....

கரையில் மீன்கள்

கருவாடு..

கடலே..மீனவனின்

சுடுகாடு!

--


Sunday, July 18, 2010

கவிதை

கற்பிழந்த நிலம்

எம் மண்ணின்

ஆடையைக் கழற்றி

போதை ஊசி போடுகிறது

உலகமயம்..

 

'கரு' ப்பை இழந்த நிலம்

ஒருப்பை நெல் கூட

தருவதில்லை..

அடுக்குமனைகளை

சுமப்பதால்..

 

 

உழவு மாடுகள்

கசாப்புக்கடையில்

ஏர் கலப்பைகள்

அடுப்பங்கரை விறகாய்..

 

சம்பா, குறுவை

நெல்லறுத்த உழவன்

ரேசன் கடையில்

ஒரு ரூபாய் அரிசிக்கு

முட்டி மோதி

நெருசலில்...

 

விதைகள்

மலட்டுத்தன்மையில்

ஊனமாய் முளைக்கிறது

திணித்தவன்

முதலாளியாய்

உழைத்தவன்

அடிமையாய்...

தாராளமயம்

தமிழர் பண்பாட்டை

தாழ்ப்பாள் போட்டு

கற்பழிக்கிறது...

 

Friday, July 16, 2010

பிரிவு

பிரிந்தவர் மீண்டும்

தென்ன ஓலையில்
கடிகாரம் செய்து
பூவரசம் பூவில்
ஊது குழல் இசைத்து
வேர்க்கடலையால்
தண்டட்டி அணிந்து

சீவாங்குச்சியில்
மெட்டிகள் மாட்டி
பனை ஓலையால்
ஒட்டியாணம் கட்டி
ஆவாரம் பூவில்
மாலைகள் அணிந்து
விளையாட்டுத்தனமாய் 
நீயும் நானும்
சின்னஞ் சிறு வயதில்
திருமணம் செய்து கொண்டோம்

மரப்பாச்சி பொம்மையை
குழந்தையாய்
வளர்த்து....
வளர்ந்தோம்..
பிரிந்தோம்..

பல ஆண்டு கடந்து
வந்திருந்தாய்
எங்கள் ஊர் கோயில் திருவிழாவிற்கு...

நீ...கணவனை இழந்த
விதவையாய்..
நான்..மனைவியை இழந்த

விளக்கம்-கவிதை

 விளக்கம்

 

 

 

 

 

இந்தியம் ஓர்

உயிர்கொல்லும் மருந்து

இனிப்பென்றே..

எதிரிகள் சொல்வார்கள்!

ஏமாந்து உண்டால்

அடிமை நோய்

தொற்றிக்கொண்டே இருக்கும்!

 

தமிழர் வாழும் நாட்டில்

இந்தியக்கொடி

அடிமையாய் வாழும்

அடையாளாம்

 

ஜனகன மன..

இந்தியகீதம்

காதில் பாயும் போதல்லாம்

தமிழுக்கு

மூக்கு வழியாய்

இரத்தம் வழிகிறது!

 

 

 

அடிமைக்கு

அருஞ்சொற்பொருள்

தமிழினமாம்...

இந்தியம் தரும்

விளக்கம்

 

இந்தியத்திற்கு

அருஞ்சொற்பொருள்

சுழி..

சொல்வதற்கே..

முளைக்கிறது

தமிழ்த்தேசம்..