Wednesday, December 5, 2007

ஏன் ?

தூக்கனாங்குருவி
தன் அலகால் கட்டியக்
கூட்டுக்குள
அழகாய்
மின்மினிப்பூச்சுகள்
விளக்கேற்றும்
 
ஈசல் கட்டிய
செம்மண் புதரில்
பாம்புகள் வந்து
உடை மாற்றும்
 
நீ மட்டும் எப்படி
என் இதயக் குடுவையில்
விளக்கேற்றி
அணைத்துவிட்டு
செத்த பாம்பாய்
வாழ்கிற எனக்கு
 
ஏன் ?
கலர்கலராய் உடை
மாற்றுகிறாய்....