Tuesday, June 3, 2008

வலி உணரு

வலி உணரு
கவிபாஸ்கர்

கடல் அலையில்
கால் நனைக்காதே
அது என் ஈழத்துத்
தோழர் தோழிகளின்
உப்புக் கண்ணீர்..

பக்கத்து ஊருக்கு
பரிசலில் போனவளே
பரிசலில் ஏறியதும்
மூக்கைப் பிடிக்காதே
அது மீன் கவுச்சி அல்ல...
ஈழ விடுதலைக்கு
சிந்திய இரத்தம்..

அடியே என்
அடி மனசில்
ஆணி அடித்தவளே..
பனை மரத்தில்
ஆணி அடிக்காதே
அது
ஈழப்போராளிகளின்
குகை வீடு....

கடல் ஆழத்தில்
மூழ்கு
வலம்புரி சங்கை எடு
தமிழீழ மக்களின்
அழுகுரல் கேள்

அடியே அழகி
இவையெல்லாம்
மனம் வலிக்க
வலி உணரு...
பிறகு என்னை
காதலி...

வலி உணரு - கவிபாஸ்கர்

வலி உணரு
கவிபாஸ்கர்

கடல் அலையில்
கால் நனைக்காதே
அது என் ஈழத்துத்
தோழர் தோழிகளின்
உப்புக் கண்ணீர்..

பக்கத்து ஊருக்கு
பரிசலில் போனவளே
பரிசலில் ஏறியதும்
மூக்கைப் பிடிக்காதே
அது மீன் கவுச்சி அல்ல...
ஈழ விடுதலைக்கு
சிந்திய இரத்தம்..

அடியே என்
அடி மனசில்
ஆணி அடித்தவளே..
பனை மரத்தில்
ஆணி அடிக்காதே
அது
ஈழப்போராளிகளின்
குகை வீடு....

கடல் ஆழத்தில்
மூழ்கு
வலம்புரி சங்கை எடு
தமிழீழ மக்களின்
அழுகுரல் கேள்

அடியே அழகி
இவையெல்லாம்
மனம் வலிக்க
வலி உணரு...
பிறகு என்னை
காதலி...