Wednesday, December 23, 2009

இந்திய தேசியத்தைக் கொளுத்து

நெருப்பெனும்
கொடூர நாக்கு
தூத்துக்குடி
முத்துக்குமாரைத்
தின்றது. . .

வரதட்சணைக்
கொடுமையில்
சாகும் பெண்போல,
இனம் சாகிற
கொடுமையில்
இறந்தான் இளைஞன் ....

தின்ற நெருப்பு கூட
அணைந்ததும்
கண்ணீh;;; வடித்தது
கண்ணீh;த் துளிகளும்
கதறி அழுதது....

பாவிகளே!
இன உhpமை
கேட்பதற்கா
இத்தனைக் கொடுமை?

மொழிப்போh;
ஈகிகளைக்
குடித்த நெருப்பு
ஈழத்தில் உயிh;களை
சுட்ட நெருப்பு...
எல்லாமே!

இந்திய தேசியம்
கொளுத்தி விட்ட நெருப்புதான்...
கொழுத்துப் போய்
குளிh;காய்கிறது
பல ஆண்டாய்...

இனி எhpயப்போகும்
நெருப்பு...
எங்களை எhpத்து
கொல்வதற்காக -அல்ல
இந்திய தேசியத்தை
எhpக்க...

கிழிந்து போன
இந்திய ஏகாதிபத்தியமே!
உனக்கு
இதயம் இல்லையென்பதும்
தொpயும்...

கண்ணிருந்தும்
கண்ணீh; வராதென்பதும்
புhpயும் - நீ
வாய் பேசாத
ஊமையென்பதும்
நாடறியும்...

காதுகள் உண்டா
இல்லையா?
தலைப்பாகையில் மூடி
செவிடா; என்பதையும்
புhpய வைத்து விட்டீh;!

சாp!
ஐந்தறிவுகளோடு
எங்களுக்கு உறவு இல்லை
'பகுத்தறிவு' எங்களை
கூப்பிடுகிறது... வணக்கம்
நாங்கள் வருகிறோம்

தமிழ்த்தேசிய வெளிச்சம் - எங்களை
வாசலில் நின்று
வரவேற்கிறது.

 

அம்பேத்கர் அழுதார்...


கருஞ்சட்டைக் கிழவன்
சாதிப் பேய்கள்
தலையில்
ஓங்கி அடித்தான்
கைத்தடியால்
சாகவில்லையே சாதி...

சட்டப்‘படி’
வந்துவிட்டது
மீண்டும்
‘மதங்’கொண்டு
கருஞ்சட்டை
அணியப்போகும்
கல்லூரியில்...

சட்டத்தின்
பட்டத்தை
காலடியில் மிதித்து
சாதியின் பட்டத்தை
பெயரெழுதி
பட்டமிடுகிறார்கள்
சட்ட மாணவர்கள்

சமூகக்காவல்
வேடிக்கைப் பார்க்க்
பத்திரிக்கைகள் மட்டும்
படமெடுத்து
சுடச்சுட தின்றன!

ஆட்சி மன்றம்
பதவி நாற்காலி
ஆடாமல் அசையாமல்
இருக்க,
நாற்;காலி கால்களுக்கு
சாதி ஆணிகளை
அடித்து கொண்டிருந்தன...

சட்டக்கல்லூரி
வளாகத்தில்
அம்பேத்கர் மட்டும்தான்
அழுதார்...

‘சட்டமும்
சாதியாய்’
அடித்துக் கொண்டதை
நினைத்து...