Friday, July 16, 2010

பிரிவு

பிரிந்தவர் மீண்டும்

தென்ன ஓலையில்
கடிகாரம் செய்து
பூவரசம் பூவில்
ஊது குழல் இசைத்து
வேர்க்கடலையால்
தண்டட்டி அணிந்து

சீவாங்குச்சியில்
மெட்டிகள் மாட்டி
பனை ஓலையால்
ஒட்டியாணம் கட்டி
ஆவாரம் பூவில்
மாலைகள் அணிந்து
விளையாட்டுத்தனமாய் 
நீயும் நானும்
சின்னஞ் சிறு வயதில்
திருமணம் செய்து கொண்டோம்

மரப்பாச்சி பொம்மையை
குழந்தையாய்
வளர்த்து....
வளர்ந்தோம்..
பிரிந்தோம்..

பல ஆண்டு கடந்து
வந்திருந்தாய்
எங்கள் ஊர் கோயில் திருவிழாவிற்கு...

நீ...கணவனை இழந்த
விதவையாய்..
நான்..மனைவியை இழந்த

1 கருத்துகள்:

கவிபாஸ்கர் said...

சோதனை...