Wednesday, December 23, 2009

அம்பேத்கர் அழுதார்...


கருஞ்சட்டைக் கிழவன்
சாதிப் பேய்கள்
தலையில்
ஓங்கி அடித்தான்
கைத்தடியால்
சாகவில்லையே சாதி...

சட்டப்‘படி’
வந்துவிட்டது
மீண்டும்
‘மதங்’கொண்டு
கருஞ்சட்டை
அணியப்போகும்
கல்லூரியில்...

சட்டத்தின்
பட்டத்தை
காலடியில் மிதித்து
சாதியின் பட்டத்தை
பெயரெழுதி
பட்டமிடுகிறார்கள்
சட்ட மாணவர்கள்

சமூகக்காவல்
வேடிக்கைப் பார்க்க்
பத்திரிக்கைகள் மட்டும்
படமெடுத்து
சுடச்சுட தின்றன!

ஆட்சி மன்றம்
பதவி நாற்காலி
ஆடாமல் அசையாமல்
இருக்க,
நாற்;காலி கால்களுக்கு
சாதி ஆணிகளை
அடித்து கொண்டிருந்தன...

சட்டக்கல்லூரி
வளாகத்தில்
அம்பேத்கர் மட்டும்தான்
அழுதார்...

‘சட்டமும்
சாதியாய்’
அடித்துக் கொண்டதை
நினைத்து...

1 கருத்துகள்:

கவிபாஸ்கர் said...

நல்லாயிருக்கு...