Tuesday, August 17, 2010
சிவக்காமல் விடியாது
ஆண்ட இனம் சொந்த நாட்டில்
அடிமையாக வாழ்வதா?
அந்நியர்கள் எங்கள் மண்ணில்
அத்துமீறி நிற்பதா?
அற மற்ற அடக்குமுறை
வரம்பற்று போவதா? தமிழர்
உயிரென்றால் ருசிபார்த்து
உறவாடிக் குடிப்பாதா?
எத்தனையோ இனப் போரை
ஆதரித்த உலகம்..
ஈழப்போராட்ட விடுதலையை
அலட்சியமாய் பார்த்ததேன்?
கொத்துக் கொத்தாய் தமிழர்களை
கொன்றொழித்த போதிலும்..
வாயிருந்தும் ஊமையாய்-உலகம்
வேடிக்கைப் பார்த்ததேன்?
மனித உரிமைக்கு குரல் கொடுத்த நாடுகள்
ஈழத்தமிழர்களின் உயிர் அறுக்க
ஆய்தத்தை தந்ததேன்?
நாதியற்ற இனமாக தமிழர் இனம் போனதோ!
தமிழர் உயிரோடு நடமாட
எங்கு சென்று ஒளிவதோ?
வாடகைக்கு வாழ்வது போல்
சொந்த நாட்டில் வாழ்வதா?
வாடகைக்கு வந்தவர்கள்
வாலாட்டித் திரிவதா?
வாழ்வதற்கு நாடு கேட்டால்
வாளை கொண்டு அறுப்பதா?
விடுதலைக்கு விடை கேட்டால்
விலங்கிட்டு அடைப்பதா?
வாக்குச் சீட்டுப் போடவா?
கட்டை விரல் முளைத்தது!
பேசாமல் இருப்பதற்கா உனக்கு
நாக்கு ஒன்று வந்தது!
இறையாண்மை இல்லையென்றால்
இருட்டறையின் வாழ்வு-நாம்
உரிமையின்றி வாழாமல்
உயிரென்ன உயிரு?...
இறையாண்மை சிலருக்கு எளிதாகப் புரியாது
வீறுகொண்ட விடுதலையை மூடி வைக்க முடியாது
நெருப்புத்துண்டுகளை கரையான்கள் அரிக்காது
இன உரிமைப் போராட்டம்
சிவக்காமல் விடியாது..
-கவிபாஸ்கர்
நன்றி: மாலை முரசு
Monday, August 9, 2010
அம்மா என்ற அன்பு வார்த்தை
மென்மையாய் வருடும்படி சோக சிறகால் வருடினார் இசையமைப்பாளர் ரூபன்...என் தூவல் வெள்ளை காகிதத்தில் என் அம்மாவை நினைத்து அழுதது....
பல்லவி
அம்மா என்ற அன்பு வார்த்தை
உலகில் அழியாது!
அம்மா என்ற ஜீவன் இன்றி
உயிர்கள் விடியாது!
கடவுள் என்பது மெய்யா பொய்யா
தெரியவில்லையே தாயே..
கருவை சுமந்த கடவுள் நீதான்
உண்மை என் அம்மா..
உன் வயிற்றில் நானே வந்து
மீண்டும் பிறக்க வேண்டும்!
அடுத்த ஜென்மம் பெண்ணாய்
பிறந்து உன்னை சுமக்க வேண்டும்
தாயே என் அம்மா..
அம்மா என் தாயே!... (அம்மா)
சரணம்-1
ராத்திரியில் பால் நிலவ பிடித்து
எனக்கு நீ தந்தாய்!
உதிரத்தில் பால் கறந்து
உயிரை எனக்கு நீ தந்தாய்..
மார்போடு தொட்டில் செய்து
உறக்கம் எனக்கு நீ தந்தாய்..
சிகரத்தில் ஏறி அமர்ந்து
கடவுளாக நீ வந்தாய்!
ஆகாயம் சுருங்காது-உன்
பாசம் தான் புதையாது
பூலோகம் அழியாது-உன்
தாலாடும் தீராது...
என் சுண்டுவிரல் நகம் கடிச்சி
ருசித்தாய் அம்மா-என்
என் கைபிடிச்சி நடக்க வைத்து
ரசித்தாய் அம்மா.. (அம்மா)
வேட்டைகாரனில் பாடிய சுஜீத் சோக ராகத்தில் பாடி முடித்து என்னை கண்ணீர் மழ்க பாராட்டினார்.
Wednesday, July 28, 2010
மீனவ்ன் சுடுகாடு
இராமேசுவர,நாகப்பட்டின
மீனவனுக்கு மட்டும்
மயானக்கரை
கடற்கரைதான்...
சுட்டுக் கொள்வது
சிங்களவனின் வேலை
அடக்கம் செய்வது
இந்தியனின் வேலை
அழுது புலம்புவதே!
தமிழர் கடமை..
கடல் அலையில்
மிதப்பது படகு அல்ல!
பாடை..
மீனவன் பிடித்த
மீன்களுக்காவது
உயிர் இருக்கிறது
மீன் பிடித்தவன் மட்டும் தான்
பிணமாய்
கடல் மீன்கள்
வயிற்றில்
குடல்கள் குறைவு..
குண்டுகளே அதிகம்!
இந்தியக் கடற்படை
காப்பாற்றியதில்லை...
மீன்களே காப்பற்றியது
மீனவர்களை..
இக்கரையில்
இந்தியன்..
அக்கரையில்
சிங்களன்..
காயம் பட்டு
சாயம் போகிறது
கடல்....
கரையில் மீன்கள்
கருவாடு..
கடலே..மீனவனின்
சுடுகாடு!
--Sunday, July 18, 2010
கவிதை
கற்பிழந்த நிலம்
எம் மண்ணின்
ஆடையைக் கழற்றி
போதை ஊசி போடுகிறது
உலகமயம்..
'கரு' ப்பை இழந்த நிலம்
ஒருப்பை நெல் கூட
தருவதில்லை..
அடுக்குமனைகளை
சுமப்பதால்..
உழவு மாடுகள்
கசாப்புக்கடையில்
ஏர் கலப்பைகள்
அடுப்பங்கரை விறகாய்..
சம்பா, குறுவை
நெல்லறுத்த உழவன்
ரேசன் கடையில்
ஒரு ரூபாய் அரிசிக்கு
முட்டி மோதி
நெருசலில்...
விதைகள்
மலட்டுத்தன்மையில்
ஊனமாய் முளைக்கிறது
திணித்தவன்
முதலாளியாய்
உழைத்தவன்
அடிமையாய்...
தாராளமயம்
தமிழர் பண்பாட்டை
தாழ்ப்பாள் போட்டு
கற்பழிக்கிறது...
Friday, July 16, 2010
பிரிவு
விளக்கம்-கவிதை
விளக்கம்
இந்தியம் –ஓர்
உயிர்கொல்லும் மருந்து
இனிப்பென்றே..
எதிரிகள் சொல்வார்கள்!
ஏமாந்து உண்டால்
அடிமை நோய்
தொற்றிக்கொண்டே இருக்கும்!
தமிழர் வாழும் நாட்டில்
இந்தியக்கொடி
அடிமையாய் வாழும்
அடையாளாம்
ஜனகன மன..
இந்தியகீதம்
காதில் பாயும் போதல்லாம்
தமிழுக்கு
மூக்கு வழியாய்
இரத்தம் வழிகிறது!
அடிமைக்கு
அருஞ்சொற்பொருள்
தமிழினமாம்...
இந்தியம் தரும்
விளக்கம்
இந்தியத்திற்கு
அருஞ்சொற்பொருள்
சுழி..
சொல்வதற்கே..
முளைக்கிறது
தமிழ்த்தேசம்..