Monday, August 9, 2010

அம்மா என்ற அன்பு வார்த்தை

சின்ன வயதில் அம்மாவை விட்டு பிரிந்த மகன் 25 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருகிறான்..அம்மாவை பார்க்க சொல்லமுடியாத நோயால் இறந்து விடுகிறாள் அவள்..அம்மாவோடு பேச முடிய வில்லையே என கதறி அழுகிறான் இவன்..இப்படி சோகம் ததும்ப பாடுவதாய் காட்சியை விளக்கினார் இயக்குனர் தினகர்.

மென்மையாய் வருடும்படி சோக சிறகால் வருடினார் இசையமைப்பாளர் ரூபன்...என் தூவல் வெள்ளை காகிதத்தில் என் அம்மாவை நினைத்து அழுதது....




பல்லவி

அம்மா என்ற அன்பு வார்த்தை
உலகில் அழியாது!
அம்மா என்ற ஜீவன் இன்றி
உயிர்கள் விடியாது!

கடவுள் என்பது மெய்யா பொய்யா
தெரியவில்லையே தாயே..
கருவை சுமந்த கடவுள் நீதான்
உண்மை என் அம்மா..

உன் வயிற்றில் நானே வந்து
மீண்டும் பிறக்க வேண்டும்!
அடுத்த ஜென்மம் பெண்ணாய்
பிறந்து உன்னை சுமக்க வேண்டும்

தாயே என் அம்மா..
அம்மா என் தாயே!... (அம்மா)


சரணம்-1


ராத்திரியில் பால் நிலவ பிடித்து
எனக்கு நீ தந்தாய்!
உதிரத்தில் பால் கறந்து
உயிரை எனக்கு நீ தந்தாய்..

மார்போடு தொட்டில் செய்து
உறக்கம் எனக்கு நீ தந்தாய்..
சிகரத்தில் ஏறி அமர்ந்து
கடவுளாக நீ வந்தாய்!

ஆகாயம் சுருங்காது-உன்
பாசம் தான் புதையாது
பூலோகம் அழியாது-உன்
தாலாடும் தீராது...

என் சுண்டுவிரல் நகம் கடிச்சி
ருசித்தாய் அம்மா-என்
என் கைபிடிச்சி நடக்க வைத்து
ரசித்தாய் அம்மா.. (அம்மா)



வேட்டைகாரனில் பாடிய சுஜீத் சோக ராகத்தில் பாடி முடித்து என்னை கண்ணீர் மழ்க பாராட்டினார்.

0 கருத்துகள்: